சிவகாசி:வெம்பக்கோட்டை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் நெல், கம்பு, உளுந்து, பாசிப்பயறு, மற்றும் சூரியகாந்தி விதைகளை மானிய விலையில் பெற்று பயன்பெறலாம் என வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பத்மாவதி தெரிவித்தார்.அவரது செய்திக்குறிப்பு: 2019 – 20 நிதியாண்டில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்வதற்கு ஏதுவாக நெல் – டி.கே.எம்-13 சான்று விதை , கம்பு தனசக்தி, உளுந்து வம்பன்- 6 ஆதாரம் 2, பாசிப்பயறு கோ-8 ஆதாராம் 2, சூரியகாந்தி டி.ஆர்.எப் -113 ஆதாரம் 2 விதைகளும் அத்துடன் அனைத்து திரவ உயிர் உரங்களும், நெல் நுண்ணுரம், சிறு தானிய நுண்ணுரம், பயறு நுண்ணுரம், பருத்தி நுண்ணுரம், சூடோமோனஸ் உரங்களும்இருப்பில் உள்ளது. விவசாயிகள் அனைவரும் விதைப்பு நேரத்தில் சான்று விதைகள் மற்றும் நுண்ணுரங்களை பெற்று பயன் பெறுமாறு கேட்டுள்ளார்.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *