தூத்துக்குடியில் வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக திமுக கிளைச் செயலாளர் உட்பட 3பேர் மீதுவழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி தாளமுத்துநகர், மாதா நகரை சேர்ந்தவர் ரவி என்கிற பார் ரவி (37). இவர் திமுக 12வது வார்டு கிளைச் செயலாளராக உள்ளார். மேலும் அங்குள்ள சந்தன மாரியம்மன் கோயிலில் தர்மகர்த்தாவாக உள்ளார்  மேலும் அரசு டாஸ்மார்க் பார் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். இவரது கோயில் நிர்வாகத்தின் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக பொருளாளர் பதவி வகித்து வந்த ரத்தினகுமார் என்பவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் ரத்தினகுமாரின் ஆதரவாளரான செல்வம் (20) என்பவர் பார் ரவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று செல்வம் வீட்டில் ஒரு திருமண நிச்சயதார்த்த விழா நடைபெற்றுள்ளது. அப்போது அவரது வீட்டருகே பார் ரவியின் உதவியாளரான பார்த்தசாரதி (20) என்பவரின் பைக் நிறுத்தப்பட்டிருந்தது. இதனை செல்வம் படமெடுத்து டிக்டாக்கில் பதிவு செய்துள்ளார். இதனை பார்த்தசாரதி கண்டித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில் நிச்சயதார்த்த விழா முடிந்தபின்னர் இரவு 1 மணியளவில் செல்வம் அவரது உறவினர் முத்துக்குமார், முத்துச்செல்வம் ஆகியோர் தெருவில் நின்று பேசிக்கொண்டிருந்தனர், அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் செல்வத்தையும் முத்துக்குமார் மற்றும் முத்துச்செல்வம் ஆகிய மூவரையும் சரமாரியாக கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.

இதில் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய மூன்று பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி செல்வம் உயிரிழந்தார். மற்ற இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொலை தொடர்பாக தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர்  தங்க கிருஷ்ணன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அருண் பாலகோபாலன் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இதுதொடர்பாக ரவி என்கிற பார் ரவி, பார்த்தசாரதி அவரது அண்ணன் இசக்கிமுத்து, கதிர் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பார்த்தசாரதியும், இசக்கி முத்துவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இந்த கொலை எதிரொலியாக அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *