பொங்கல் திருநாளைக் கொண்டாட சொந்த ஊர்களுக்கு புறப்பட்ட மக்கள்…

பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட, பொது மக்கள் சென்னையில் இருந்து புறப்பட்டு செல்ல தொடங்கியுள்ளனர்.

வரும் 14-ம் தேதி போகி பண்டிகையை தொடர்ந்து பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இதற்காக சென்னையிலிருந்து லட்சகணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையொட்டி தமிழக அரசின் சிறப்பு பேருந்துகளின் சேவையும் தொடங்கியுள்ளது. இந்நிலையில் பலருக்கும் இந்த வார இறுதியிலிருந்தே பொங்கல் விடுமுறை துவங்குவதால், பொதுமக்கள் தங்களது குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். இதில் திருச்சி, நாகை, கடலூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு அதிக அளவில் பொதுமக்கள் பயணிக்க தொடங்கியுள்ளனர்.

 

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *