மறவாமதுரை ஊராட்சியில் தன்னார்வலர்களுக்கு பேரிடர் மேலாண்மை மீட்பு பயிற்சியினை வழங்கினர் தீயணைப்பு துறையினர்..

புதுக்கோட்டை மாவட்டம்
பொன்னமராவதி ஒன்றியம் காரையூர் வட்டம் மறவாமதுரை கிராமத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தன்னார்வலர்களுக்கு பேரிடர் மேலாண்மை மீட்பு பயிற்சி வழங்கப்பட்டது.திருச்சி மத்திய மண்டல துணை இயக்குநர் சரவணக்குமார் அறிவுறுத்தலின்படி புதுக்கோட்டை மாவட்ட அலுவலர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித் துறை பானுப்பிரியா
ஆலோசனையின்படி பொன்னமராவதி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் சந்தானம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் காரையூர் வருவாய் ஆய்வாளர் பாண்டி முன்னிலையில் மறாவமதுரை பகுதியை சேர்ந்த தன்னார்வலர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சியானா இயற்கை இடர்பாடுகள்,பேரிடர் காலங்களில் பொதுமக்கள் சிக்கித்தவித்தால் பொது மக்களை எவ்வாறு மீட்பது குறித்த விழிப்புணர்வு பயிற்சியினை தீயணைப்பு துறை வீரர்கள் செய்து காண்பித்தனர்.மேலும் அப்பகுதி மக்களிடையே இடையே பேசிய தீயணைப்பு நிலைய அலுவலர் சந்தானம் தீ விபத்து நிகழும் போது முன் தடுப்பு நடவடிக்கையாக தீயணைப்பு கருவி மூலம் தீயை அணைக்க வேண்டும், தீ விபத்து மற்றும் பாம்பு, மாடு, ஆடு, ஏதேனும் விபத்து என்றால் 101 எண்கள் மூலம் தீ கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் நிலைய அலுவலர் சந்தானம் விளக்கி கூறினார்.இதில் தீயணைப்பு வீரர்கள், ஊராட்சித் தலைவர்,ஊர் பொது மக்கள், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *