ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, திருப்பத்தூர், நாமக்கல், நீலகிரி மாவட்டங்களில் ரூ. 23,78,34,000 மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவியர்களுக்கான 10 விடுதிக் கட்டடங்கள் மற்றும் 3 பள்ளிக் கட்டடங்களை மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் திறந்து வைத்தார்.