விழிப்புணர்வு வார குறை தீர்ப்பு முகாம்
சென்னை பொது அஞ்சல் அலுவலகத்தில், விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, வாடிக்கையாளர் குறை தீர்ப்பு நாள், வரும் 27-10-2021 (புதன் கிழமை) காலை 11.00 மணியளவில் முதன்மை அஞ்சல் அதிகாரி, சென்னை பொது அஞ்சல் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. சென்னை பொது அஞ்சல் அலுவலகத்தினால் மட்டும் அளிக்கப்படும் அஞ்சலக சேவைகள் குறித்து, ஆலோசனைகள்/ குறைகள் ஏதேனும் இருப்பின் வாடிக்கையாளர்கள் நேரில் கலந்துகொண்டு தங்கள் ஆலோசனைகள்/ குறைகளை தெரிவிக்கலாம் என சென்னை பொது அஞ்சல் அலுவலக முதன்மை அஞ்சல் அதிகாரி தெரிவித்துள்ளார்.