அமைந்தகரை பகுதியில் இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்த 3 நபர்கள் கைது. 1.4 கிலோ கஞ்சா மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல்.
சென்னை பெருநகரில் “போதை பொருள் தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
K-3 அமைந்தகரை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் நேற்று (18.10.2021) மாலை அரும்பாக்கம், NSK நகர், 25வது தெருவில் கண்காணிப்பு பணியிலிருந்த போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்களை நிறுத்தி விசாரணை செய்து, அவர்களை சோதனை செய்த போது, இருசக்கர வாகனத்தில் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
அதன்பேரில் இருசக்கர வாகனத்தில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தி வந்த 1.பங் (எ) சந்தோஷ்குமார், வ/19, த/பெ.மூர்த்தி, எண்.34 B, நடுவங்கரை, சென்னை, 2.ஸ்பீடு அஜித் (எ) அஜித், வ/23, த/பெ.உசேன், எண்.461, 25வது தெரு, NSK நகர், அரும்பாக்கம், சென்னை, 3.சக்திவேல், வ/24, த/பெ.முருகன், எண்.536, 3வது தெரு, NSK நகர், அரும்பாக்கம், சென்னை ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1.4 கிலோ கஞ்சா மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் கைது செய்யப்பட்ட பங் (எ) சந்தோஷ்குமார் மீது K-3 அமைந்தகரை காவல் நிலையத்தில் ஒரு அடிதடி வழக்கு, S-11 தாம்பரம் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கு உள்ளதும், சக்திவேல் மீது K-3 அமைந்தகரை காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கு உள்ளதும் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட 3 நபர்களும், விசாரணைக்குப் பின்னர், இன்று (19.10.2021) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டவுள்ளனர்.