நுங்கம்பாக்கம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்து கஞ்சா விற்பனை செய்த ட வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் உட்ப 3 நபர்கள் கைது. 3.2 கிலோ கஞ்சா மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல்.
சென்னை பெருநகரில் “போதை பொருள் தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, F-3 நுங்கம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் நேற்று (14.10.2021) மாலை வள்ளுவர்கோட்டம், லேக் ஏரியா மெயின் ரோட்டில் ரகசியமாக கண்காணித்தபோது, அங்கு ஒரு பெண் உட்பட 3 நபர்கள் இருசக்கர வாகனத்தின் கஞ்சாவை மறைத்து வைத்து, ரகசியமாக விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.
அதன்பேரில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த 1.லோகேஸ்வரநாத், வ/33, த/பெ.பாண்டேஸ்வரநாத், D பிளாக், செம்மஞ்சேரி குடிசைமாற்று வாரிய குடியிருப்பு, செம்மஞ்சேரி, 2.அபிஜித் போரா, வ/37, த/பெ.இந்தேஸ்வர் போரா, கபாலீஸ்வரர் நகர், நீலாங்கரை, சென்னை, 3.பின்னிவேரா, பெண்/வ.30, க/பெ.விகார், சொரானா கிராமம், கோர்த்தா மாவட்டம், ஒடிசா மாநிலம் ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த 3 கிலோ 200 கிராம் எடை கொண்ட கஞ்சா மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 டியோ இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் கைது செய்யப்பட்ட 3 நபர்களும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், எதிரிகள் லோகேஸ்வரநாத் மீது செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு திருட்டு வழக்கும், அபிஜித் போரா மீது J-8 நீலாங்கரை காவல் நிலையத்தில்ஒரு கஞ்சா வழக்கும், பெண் எதிரி பின்னிவேரா மீது S-10 பள்ளிக்கரணை காவல் நிலையத்தில ஒரு கஞ்சா வழக்கும் உள்ளது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட 3 எதிரிகளும், விசாரணைக்குப் பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.